இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி, மே மாத உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி,2025 மே மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6,284 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் கையிருப்பு
இது, 2025 ஏப்ரல் மாத இறுதியில் பதிவான 6,327 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு சொத்துக்களுடன் ஒப்பிடும்போது 0.7% வீழ்ச்சியாகும்.
இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கி 2025 மே மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 260.8 மில்லியன் டொலர்களை வாங்கி 4 மில்லியன் டொலர்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 மே மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி வாங்கிய டொலர்களின் நிகர தொகை 256.8 மில்லியன் டொலர்கள் ஆகும்.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
