பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்
வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பொதுத்தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ நடைபெற்றால் இரண்டுக்கும் கட்சி தயாராகவே உள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

நாட்டில் பலம் வாய்ந்த கட்சி
மேலும், இன்று இந்த நாட்டில் பலம் வாய்ந்த கட்சியாக பொதுஜன பெரமுன திகழ்வதாகவும், பசில் ராஜபக்சவின் திட்டங்களுடனேயே கட்சியின் வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்சவின் செயற்பாடு மற்றும் கட்சிக்கு இணையான ஒரு அரசியல் கட்சி தலைவர் இருப்பார் என தாம் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan