கடனுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை
இலங்கை எந்த தரப்பினரிடம் இருந்து கடனுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை எனவும் பணத்தை கொடுத்து மாத்திரமே எரிபொருளை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கையில் இருக்கும் பணத்தை கொடுத்தே எரிபொருளை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது.
ஜூன் மாதம் 500 மில்லியன் டொலர் தேவை

ஜூன் மாதத்திற்கு மாத்திரம் சுமார் 500 மில்லியன் டொலர்கள் தேவை என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். இலங்கை ரூபாவின் பெறுமதியில் இந்த தொகை 203 பில்லியன் ரூபாய்.
ரஷ்யாவிடம் இருந்து ஏன் குறைந்த விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை என நாடாளுமன்றத்திற்கு கேள்வி எழுப்புகின்றனர். அனைத்து யோசனைகள், எம்மால் முடிந்த நிபந்தனைகள் என்ன என்பதை அனைத்து நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளோம்.
இதனடிப்படையில், தகுதியான விநியோகஸ்தர்களுடன் உடன்படிக்கை செய்து, விநியோகத்தை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் எனவும் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam