மகிந்தவுக்கு தூக்குத் தண்டனையே பொருத்தமானது! சரத் பொன்சேகா பகிரங்கம்

Mahinda Rajapaksa Sarath Fonseka Government Of Sri Lanka
By Laksi Oct 06, 2025 04:22 PM GMT
Report

​அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு தூக்குத்தண்டனையே பொருத்தமானது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதில் தாமதம் குறித்து ராஜபக்சவின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து பெறுமதி மிக்க அரச சொத்துக்கள் சட்டவிரோதமாக தனிப்பட்ட இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். ​

இலங்கையில் மக்கள் மீது மோதித்தள்ளிய வாகனம் - 3 பேர் பலி - பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்

இலங்கையில் மக்கள் மீது மோதித்தள்ளிய வாகனம் - 3 பேர் பலி - பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்

குற்றச்சாட்டுகள்

தனது தனிப்பட்ட பொருட்களை அகற்றுவதற்கு முன், அரச சொத்துகளின் சரக்குப் பட்டியலை நிறைவு செய்ய அரச துறைகள் காத்திருப்பதாக ராஜபக்ச தரப்பு கூறியதை பொன்சேகா கேலி செய்தார்.

​வீட்டை பழுதுபார்ப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் செலவழித்த மகிந்த ராஜபக்ச, தனது சொந்த பணத்தில் வாங்கிய ஒரு தேங்காய்த் துருவியை கூட கொண்டு வருவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா என்று அவர் கேள்வி எழுப்பினார். ​

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனையே பொருத்தமானது! சரத் பொன்சேகா பகிரங்கம் | Death Penalty Is Appropriate For Rajapaksa Fonseka

நான் நீதித்துறை அமைச்சராக இருந்திருந்தால், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து பெறுமதி மிக்க பொருட்களை விஜேராம இல்லத்திற்கு மாற்றியதற்காக ராஜபக்ஷவுக்கு எதிராக முதல் வழக்கை தாக்கல் செய்திருப்பேன். அவரை 24 மணி நேரத்தில் கைது செய்ய முடியும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

​ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பல குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்தபோதிலும், முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்து பொதுமக்களை சுரண்டுவதாக பொன்சேகா குற்றம் சாட்டினார்.

இந்த அரசாங்கம் எவ்வளவுதான் தங்கள் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் பெருமை பேசினாலும், அவர்களால் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக சரியாக நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், அவர்கள் நாட்டைச் சீர்திருத்திவிட்டார்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்கள ஊழியர்களின் மாபெரும் மோசடி! அம்பலப்படுத்திய தபால் மா அதிபர்

தபால் திணைக்கள ஊழியர்களின் மாபெரும் மோசடி! அம்பலப்படுத்திய தபால் மா அதிபர்

தண்டனை

போரின் இறுதி நாட்களை நினைவு கூர்ந்த பொன்சேகா, விடுதலைப் புலித் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்ல அனுமதிக்கும் நோக்கத்திலேயே ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்தார் என்று குற்றம் சாட்டினார்.

​போரின் இறுதி நாட்களில் அவர் ஏன் போர் நிறுத்தத்தை உத்தரவிட்டார் என்பதை மகிந்த ராஜபக்ச விளக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனையே பொருத்தமானது! சரத் பொன்சேகா பகிரங்கம் | Death Penalty Is Appropriate For Rajapaksa Fonseka

இது வேறு நாடாக இருந்திருந்தால், இந்தத் துரோகச் செயலுக்காக மகிந்த ராஜபக்சவை காலில் தூக்கிக் கட்டி கொலை செய்திருப்பார்கள். நமது அரசியலமைப்பின்படி அவருக்குரிய தண்டனை தூக்கிலிடப்படுவதே ஆகும்” என்று அவர் கூறினார். ​

முன்னாள் ஜனாதிபதி மீது தனக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என்றாலும், ராஜபக்சவின் நாட்டிற்கு இழைத்த துரோகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பொன்சேகா கூறினார்.

துறைமுகங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனம், போதைப்பொருள் மாஃபியா, ஆயுத இறக்குமதியாளர்கள், சுங்கத் துறை, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றில் இருந்து ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு ஊக்குவிக்கப்பட்டது என்று அவர் கூறினார். ​

உயர்மட்ட விசாரணை

ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் போர் வீரர்களுக்கு இழைக்கப்பட்ட நடத்தையையும் அவர் நினைவு கூர்ந்ததுடன் நாங்கள் போரில் ஈடுபட்டிருந்தாலும் பிரபாகரன் எங்கள் குடும்பங்களை தாக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஆனால் ராஜபக்சக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல," என்றும் கூறியுள்ளார்.

தனது குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறு அவர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனையே பொருத்தமானது! சரத் பொன்சேகா பகிரங்கம் | Death Penalty Is Appropriate For Rajapaksa Fonseka

மகிந்த ராஜபக்ச ஏன் நாட்டைக் காட்டிக் கொடுத்தார் என்பதைக் கண்டறிய உயர்மட்ட விசாரணை - ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு - கூட அமைக்க வேண்டிய கடமை இந்த அரசாங்கத்திற்கு உள்ளது," என்று அவர் கூறினார். ​

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளைப் பாராட்டிய பொன்சேகா, "ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், குற்றவாளிகளைப் பாதுகாக்காத அதன் நிலைப்பாட்டையும் நான் பாராட்டுகிறேன், ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

யாழில் வாகன தரிப்பிடத்தை மூடி கொட்டகை அமைத்த வைத்தியர்!

யாழில் வாகன தரிப்பிடத்தை மூடி கொட்டகை அமைத்த வைத்தியர்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US