வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு

Vavuniya Sri Lanka Police Investigation Crime
By Keethan Nov 17, 2024 01:10 AM GMT
Report

வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் நேற்றையதினம் (16) சம்பவித்துள்ளது.

முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மணிவேல் பிள்ளை சஞ்சீவ் பிரதீபன் என்ற 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட தகவல்

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட தகவல்

மருத்துவமனையில் அனுமதி

குறித்த நபர் முள்ளிவளை பொலிஸாரால் கடந்த (16.10.24) அன்று கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இரு குற்றவாளிகளுக்கு பிணை வைத்துள்ளதுடன் மற்றும் ஒரு குற்றச்செயல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் (23.10.24) அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு | Death Of Inmate In Vavuniya Prison

அப்போதும் உறவினர்கள் பார்வையிட்டுள்ளார்கள். அதன் பின்னர் 06.11.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வவுனியா சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது அவர் நன்றாக இருந்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனைவி பிள்ளைகள் அறிந்து அங்கு சென்று பார்வையிட்ட போது அவர் பேச்சற்ற நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், கைதியினை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது கைதி தொடர்பில் எந்த தகவலும் பொலிஸாரால் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.

இலங்கை வந்த அமெரிக்க கடற்படையின் ஏவுகனை நாசகாரி கப்பல்

இலங்கை வந்த அமெரிக்க கடற்படையின் ஏவுகனை நாசகாரி கப்பல்

தாக்குதல்

இந்த நிலையில் முள்ளியவளை பொலிஸார் ஏற்கனவே குறித்த கைதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா சிறைச்சாலை பொலிஸார் குற்றம் சாட்ட முள்ளியவளை பொலிஸார் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு | Death Of Inmate In Vavuniya Prison

இதனை விட தீவிர சிகிச்சைப்பிரிவில் உறவினர்கள் மருத்துவரிடம் விசாரித்த போது அவரது மூளை சாவடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

கடந்த ஒருவாரமாக மூளை சாவடைந்த நிலையில் குறித்த கைதி நேற்று உயிரிழந்துள்ளார்.

இரண்டு நாட்களில் அமைக்கப்படவுள்ள புதிய புதுமுக அமைச்சரவை

இரண்டு நாட்களில் அமைக்கப்படவுள்ள புதிய புதுமுக அமைச்சரவை

நீதியான விசாரணை

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பம் நீதி கட்டு வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கடந்த 13 ஆம் திகதி சென்றபோது அவர்கள் 18ஆம் திகதி திங்கட்  கிழமைதான் முறைப்பாடு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ள நிலையில் குறித்த கைதி உயிரிழந்துள்ளார்.

வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு | Death Of Inmate In Vavuniya Prison

இந்த கைதியின் உயிரிழப்பு குறித்து மனைவி பிள்ளைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் சிறைச்சாலையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், இவரின் உயிரிழப்பு தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகுவதற்கு அழுத்தம்

தமிழரசுக் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகுவதற்கு அழுத்தம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US