கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தவறுதலாக அதிகளவு காபனீரொட்சைட் வழங்கப்பட்டமையால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - நுகேகொடை பகுதியில் வசிக்கும் 61 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு, மார்பக அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக செய்யப்பட்டு, அதன் பின்னர் ஒட்சிசன் வழங்கப்படுவதற்கு பதிலாக அதிகளவு காபனீரொட்சைட் வாயு வழங்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு சேவையில் குறைபாடு
இந்த சம்பவம் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளதா அல்லது ஒட்சிசன் சிலிண்டர் மாசடைந்துள்ளதா என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வைத்தியசாலையின் பராமரிப்பு சேவையில் உள்ள குறைபாட்டையே இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 4 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan