கோவிட் நிமோனியா கறுப்பு பூஞ்சை தொற்றால் இலங்கையில் இறந்துள்ள முதல் நபர்
கோவிட் நிமோனியா மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக இலங்கையில் முதலாவது மரணம் சம்பவித்துள்ளதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் பிரதானி விசேட சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் ருவான்புர தெரிவித்துள்ளார்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோவிட் நிமோனியா காரணமாக ஒருவர் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதியே அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த ஆய்வின் அறிக்கை நேற்று கிடைத்த நிலையில் ஆய்வு அறிக்கைக்கு அமைய உயிரிழந்தவரின் நுரையீரலில் கறுப்பு பூஞ்சை தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரொஹான் ருவான்புர குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூஞ்சைகள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் திரிமாலி ஜயசேகர ஆராய்ச்சியை நடத்தியுள்ளார்.
இலங்கையில் கோவிட் நிமோனியா மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக உயிரிழந்த நபரின் மரணம் சம்பந்தமாக நடத்தப்பட்ட முதலாவது பிரேத பரிசோதனை இதுவாகும் எனவும் விசேட சட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனைகளை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி சமாதி தந்தெனிய நடத்தியுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசித்து வந்த 56 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
