ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள 30 அடி திமிங்கிலம்
யாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இறந்த நிலையில் 30 அடி திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளது.
ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரை பகுதியிலேயே குறித்த திமிங்கிலம் இன்றைய தினம் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று காலை கரைக்கு திரும்பும் போது இந்த திமிங்கிலத்தை அவதானித்துள்ளனர்.
இலங்கையில் கடற்பரப்பில் சில நாட்களுக்கு முன்னர் தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து வெளியேறிய சில பொருட்கள் சூழலுக்கு பாதகமானவை என தெரிவிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் பல கடற்பரப்பு பகுதிகளில் உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.