குற்றப் புலனாய்வுத் துறைக்கு சென்று திரும்பிய தயாசிறி!
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்று குற்றப் புலனாய்வுத் துறையில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். எனினும், விசாரணையின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள், சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை பெற்றமை தொடர்பான வாக்குமூலத்துக்காகவே,அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னிப்பு
இதேவேளை வடமத்திய மாகாண சபைக்குச் சொந்தமான BMW கார் 5 மில்லியன் ரூபாய்களுக்கும் குறைவாக விற்கப்பட்டதாக முன்னர் கூறியமை தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.
செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட தவறான செய்திகளால் தான் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக, பதிவைத் திருத்துவதற்கு தான் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜெயசேகர கூறியுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
