தயாசிறி ஜயசேகர அமைச்சு பதவியை விட்டு விலகிக்கொள்ளலாம்! நிமல் லன்சா கோரிக்கை
தயாசிறி ஜயசேகர, தமக்கு பொருத்தமற்றதாக இருந்தால் தமது ராஜாங்க அமைச்சு பதவியை விட்டு விலகிக்கொள்ளலாம் என்று கிராமப்புற சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் நிமல் லன்சா கோரியுள்ளார்.
அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, பதவியை ராஜினாமா செய்தால், கட்சியைச் சேர்ந்த மற்றொருவர் அந்த பதவியை பொறுப்பேற்க முடியும் என்றும் லன்சா குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு ஒதுக்கப்பட்ட ராஜாங்க அமைச்சினை ஜெயசேகர குறைகூறியதை அடுத்தே லன்சா இந்த கருத்தை தெரிவித்தார்.
பசில் ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட வேடிக்கையான அமைச்சுகளில் ஒன்று தனக்கு கிடைத்ததாக ஜெயசேகர கூறியிருந்தார்.
இந்த நிலையில், பசில் ராஜபக்ஷ வந்த பிறகு, அவர் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஒரு திட்டத்தை உருவாக்கி, இந்த நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளிப்பார்.
அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், திவிநெகும போன்ற திட்டங்களை ஆரம்பித்து ஏழைகளின் நலனுக்காக உழைத்தவர்.
எனவே அவரது வருகையை எல்லோரும் விரும்புகிறார்கள், என்று நிமல் லன்சா கூறியுள்ளார்.