தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை நடத்தப்படும்.
திகதி அறிவிப்பு
முதலாம் பகுதி வினாத்தாளை முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.