கொழும்பு கோட்டையில் ஏற்பட்டுள்ள ஆபத்து - மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாலுள்ள மேம்பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் பாரிய விபத்து ஏற்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கு பல தடவைகள் தெரியப்படுத்திய போதிலும் அதனை சீர்செய்யவோ அல்லது பராமரிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கொழும்பு மத்திய பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று முதல் புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாலத்தை கடக்க முடியும் எனவும், சில சந்தர்ப்பங்களில் சாறி அணிந்து கடமைக்கு செல்லும் பெண்கள் இந்த பாலத்தில் சிதைந்த பகுதிகளில் சிக்கி விபத்தக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் அவதானமிக்க இடங்களில் சீமெந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரிய அளவிலான மக்கள் ஒரே நேரத்தில் பாலத்தில் நடந்தால் பாலம் உடைந்து விழ கூடும் என உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிலவும் ஆபத்தான சூழ்நிலையில் பாலம் மூடப்பட்டு சீரமைக்கப்பட்டால், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் வீதி திட்டத்தை வகுக்க பொலிஸார் தயாராக உள்ளனர்.
கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்கவிடம் வினவியபோது, மாநகர சபையின் பொறியியலாளர்கள் இவ்வாறான அபாயகரமான நிலைமையை அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மேம்பாலம் உலக வங்கியின் திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்குள்ள தற்போதைய நிலைமையை உடனடியாக ஆராய்ந்து பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.