தம்மிக பெரேரா அமைச்சராக பதவிப்பிரமாணம்
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா இன்று அமைச்சு பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட தேசியப்பட்டியல் வெற்றிடத்துக்கு தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டிருந்தார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு பொறுப்பேற்பு
கடந்த புதன்கிழமை காலை சபாநாயகர் முன்பாக நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அவர், இன்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இந்தப் பதவியேற்பு வைபவம் நடைபெற்றுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் தவணை ஜனாதிபதி பதவிக்காலத்தில் தம்மிக பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிறுவனின் செல்போனை உடைத்த கால்பந்து வீரர் ரொனால்டோ...குவியும் எதிர்ப்புகள்: வெளியான வீடியோ News Lankasri

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan

தனது தங்கைக்கு மலர்தூவி பிராத்தனை செய்யும் விஜய்யின் அரிய வீடியோ- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று Cineulagam

தளபதி விஜய் வைத்த பார்ட்டியில் ஷங்கர், விக்ரம், உதயநிதி ஸ்டாலின்! சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம் Cineulagam
