காற்றுடன் கூடிய மழையால் தம்பலகாமத்தில் பாரிய சேதம்
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய சுழல் காற்றினால் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தம் நேற்று இரவு (26.12.2023) இடம்பெற்றுள்ளது.
பலத்த சேதம்
தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பத்தினிபுரம், இக்பால் நகர் முதலான பகுதிகளில் சுமார் ஐந்திற்கு மேற்பட்ட வீடுகளின் கூரைகளும் கடை ஒன்றும் சேதமடைந்துள்ளது.

மேலும் கன மழையுடன் வீசிய காற்றினால் மரங்களும் முறிந்துள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்குவதற்கு இடமின்மை
அனர்த்தம் காரணமாக குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளமையால் தங்குவதற்கு இடமின்றி பல அசௌகரியங்களை தாம் எதிர் நோக்குவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே. இது தொடர்பில் உரிய அதிகாரிகள் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        