இலங்கையில் பண பாவனை தொடர்பில் எச்சரிக்கை - 20 வருடம் சிறைத்தண்டனை
பண்டிகைக் காலத்தில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில் உள்ளமை குறித்து பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர் தெரிவித்துள்ளார்.
பணத் தாள்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட பெரும்பாலான போலி பணத் தாள்கள் 5000 ரூபாய் நாணயத்தாள்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணத் தாள்கள்
2024 ஆம் ஆண்டில், குற்றப் புலனாய்வுத் பிரிவினால் போலி 5000 ரூபாய் பணத் தாள்கள் 596 கைப்பற்றப்பட்டன.

2025 ஆம் ஆண்டில் இதுவரை போலி 5000 ரூபாய் பணத் தாள்கள் 535 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி பணத்தாள்கள் அச்சிடுதல், அவற்றை வைத்திருத்தல் மற்றும் போலி பணத்தாள்களை அச்சிடுவதற்கான உபகரணங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri