ஒரு நாளில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்!சூறாவளியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் வெளியானது
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவான 'மண்டோஸ்' சூறாவளியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூறாவளியின் தாக்கம் நேற்று (08.12.2022) மற்றும் இன்று (09.12.2022) நாட்டின் பல பகுதிகளை பாதித்துள்ளது.
1,302 வீடுகள் சேதம்
இந்த மண்டோஸ் சூறாவளியால் நாட்டில் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 1,302 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்படைந்துள்ள மாவட்டங்கள்

இதன்போது 1,302 குடும்பங்களைச் சேர்ந்த 4,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் (ஊடக) பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மேலும் ஊவா மாகாணம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 723 குடும்பங்களைச் சேர்ந்த 2,093 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேரும், அந்த மாகாணத்தில் 916 குடும்பங்களைச் சேர்ந்த 2,093 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri