இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு (video)
இலங்கையில் முகக் கவசம் அணியுமாறு உத்தரவிடப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மீள் அறிவிப்பு வரும் வரை முகக் கவசம் அணிய வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தூசித் துகள்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட வளி மாசு பாரியளவில் குறைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய காற்றின் நிலை மற்றும் அதன் அபாயம் குறித்து அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் சில நாட்களில் முகக் கவசம் அணிவது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வயதானவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட ஆபத்துக் குழுவில் உள்ள நோயாளிகள் முடிந்தவரை தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதைக் கட்டுப்படுத்துமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri