இலங்கைக்கு சென்றால் ஆபத்து : இலங்கையரை தடுப்புக்காவலில் இருந்து விடுவித்த சைப்பிரஸ் நீதிமன்றம்

Sri Lanka Sri Lankan Peoples Cyprus
By Amal Jan 19, 2025 06:06 AM GMT
Report

சைப்பிரஸின் (Cyprus) உயர்நீதிமன்றம், இலங்கையர் ஒருவரை உடனடியாக தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

அவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டால், சித்திரவதைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை எடுத்துக்காட்டியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும் ஆபத்து காரணமாக அவரை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என்ற புகலிட சேவையினர் வழங்கிய சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட சைப்பிரஸின் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்..

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்..

நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் விவரிக்கப்பட்டுள்ள வழக்கு, 2017 ஆம் ஆண்டுக்கு முன்னரானது, அந்த நபர் சைப்பிரஸில் தனது குடியிருப்பு மற்றும் பணி அனுமதியைப் புதுப்பிக்க விண்ணப்பித்தபோது, ​​அது வழங்கப்பட்டது.

இருப்பினும், 2018ஆம் ஆண்டு பெப்ரவரியில்; தாக்கல் செய்யப்பட்ட அவரது புகலிட விண்ணப்பம் 2020 இல் புகலிட சேவையால் நிராகரிக்கப்பட்டது.

இலங்கைக்கு சென்றால் ஆபத்து : இலங்கையரை தடுப்புக்காவலில் இருந்து விடுவித்த சைப்பிரஸ் நீதிமன்றம் | Cyprus Court Releases Sri Lankan From Detention

இதனையடுத்து 2020இல் அவர், சர்வதேச பாதுகாப்பு நிர்வாக நீதிமன்றத்தில் தீர்ப்பை மேன்முறையீடு செய்தார்.

ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில் மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது புகலிட விண்ணப்பமும் ஜனவரி 2023 இல் நிராகரிக்கப்பட்டது,

அத்துடன் 2023 மார்சிலும் மற்றொரு மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில் 2025 ஜனவரி 5ஆம் திகதியன்று, குறித்த இலங்கையர், நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு, சட்டவிரோத குடியேறிகளுக்கான தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டார்.

நாடுகடத்தல் உத்தரவுகள் 

அவரது காவலில் இருந்தபோது, தாம் ஏன் இலங்கைக்கு திரும்பவில்லை என்பதை அவர் தெளிவுப்படுத்தினார். ஆனால் 2024 ஜனவரி 6 ஆம் திகதியன்று அவருக்கு தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இலங்கைக்கு சென்றால் ஆபத்து : இலங்கையரை தடுப்புக்காவலில் இருந்து விடுவித்த சைப்பிரஸ் நீதிமன்றம் | Cyprus Court Releases Sri Lankan From Detention

இந்தநிலையில் அவர் இலங்கைக்குத் திரும்புமாறு வழங்கப்பட்ட முடிவை அவர் பின்பற்ற மறுத்ததால், அவரை காவலில் வைத்திருப்பது மட்டுமே ஒரே வழி என்று அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இதனையடுத்து 2024 ஜனவரி 15ஆம் திகதியன்று, குறித்த இலங்கையர், ஒரு புதிய புகலிட விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.

எனினும் 2024 பெப்ரவரி 22 இல் அதிகாரிகள் மற்றொரு தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தல் உத்தரவை அவருக்கு எதிராக பிறப்பித்தனர்.

அத்துடன் 2024 ஆகஸ்ட் மாதத்தில், அவரின் புகலிட விண்ணப்பம் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

இலங்கைக்கு திருப்பி அனுப்புவது

இருப்பினும் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது சித்திரவதைக்கு ஆளாக்கும் என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

இந்தநிலையில், தனது மேன்முறையீட்டில், கீழ் நீதிமன்றம் முக்கியமான புதிய உண்மைகளைக் கருத்தில் கொள்ளத் தவறியதால், அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று அந்த இலங்கையர் வாதிட்டார்.

இலங்கைக்கு சென்றால் ஆபத்து : இலங்கையரை தடுப்புக்காவலில் இருந்து விடுவித்த சைப்பிரஸ் நீதிமன்றம் | Cyprus Court Releases Sri Lankan From Detention

நீதிமன்றம் சட்டத்தை தவறாகப் புரிந்துகொண்டதாகவும், அவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணங்கள் இனி பொருந்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த உண்மைகளை ஆராய்ந்த சைப்பிரஸின் உயர்நீதிமன்றம், மனுதாரரான இலங்கையரை இலங்கைக்கு நாடு கடத்துவது அவரை கடுமையான ஆபத்துகளுக்கு ஆளாக்கும் என்ற புகலிட சேவையின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது.

அத்துடன் அவரை தடு;ப்புக்காவலில் இருந்து விடுவிக்குமாறும் உத்தரவிடடுள்ளது.

கடந்த அரசாங்கங்களின் அமைதியை தகர்த்தெறிந்த அநுர தரப்பு! ஒரே சீனா கொள்கைக்கு பச்சைக் கொடி

கடந்த அரசாங்கங்களின் அமைதியை தகர்த்தெறிந்த அநுர தரப்பு! ஒரே சீனா கொள்கைக்கு பச்சைக் கொடி

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக முறைப்பாடுகளை அனுப்ப உயர்நீதிமன்றம் அனுமதி

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக முறைப்பாடுகளை அனுப்ப உயர்நீதிமன்றம் அனுமதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US