யாழில் இந்திய துணைத் தூதுவரை சந்தித்த சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழுவினர் யாழ்ப்பாண இந்தியத் துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளியை சந்தித்தனர்.
இவர்கள் ஏற்கனவே தமது துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.
இதன்போது இலங்கை தீவு முழுவதும் அவர்களின் சைக்கிள் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என யாழ்ப்பாண இந்தியத்தூதுவர் ஸ்ரீ சாய் முரளி அவர்கள் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கை முழுவதும் பயணம்
இவர்கள் உலகநாடுகளுக்கு சென்று துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் இலங்கை முழுவதும் தற்போது துவிச்சக்கர வண்டி பயணத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri