இந்திய ஹெக்கர்கள் தொடர்பில் சைபர் பாதுகாப்பு நிறுவனம் அதிர்ச்சித் தகவல்!
பாகிஸ்தானின் பல்வேறு சட்டம் நடைமுறையாக்கங்கள் மற்றும் பொலிஸ் முகமைகளைக் குறிவைத்து, சீனா மற்றும் இந்தியாவுடன் தொடர்புடைய ஹெக்கிங் குழுக்கள் தனித்தனியாக சைபர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக 'சென்டினல்ஒன்' என்ற முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனம் தனது புதிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2024 பெப்ரவரி முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் இந்த உளவு பார்க்கும் நடவடிக்கைகள் மற்றும் ஊடுருவல்கள் அரங்கேறியுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹெக்கர்களின் இலக்கு
பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சூழல், தீவிரவாத வன்முறைகள், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பதற்றங்கள் மற்றும் சீனாவுடனான பொருளாதாரக் கூட்டுறவு போன்ற முக்கியத் தகவல்களைத் திரட்டுவதையே இந்த ஹெக்கர்கள் இலக்காகக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக, தென்மேற்குப் பகுதியான பலுசிஸ்தான் பொலிஸ் நிலையத்தின் இணையச் சேவையகம் மற்றும் அவர்களின் 'முறைப்பாட்டு முகாமைத்துவ அமைப்பு' ஆகியவை இந்தத் தாக்குதலில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பணியாற்றி வரும் தங்களது நாட்டுப் குடிமக்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் நோக்கில் சீன ஹெக்கர்களும், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பதற்றம் மற்றும் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைப்பாட்டை அறியும் நோக்கில் இந்திய ஹெக்கர்களும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!
சைபர் தாக்குதல்
மேலும் கைபர் பக்துன்க்வா (KP) பொலிஸார், இஸ்லாமாபாத் பொலிஸார் மற்றும் பஞ்சாப் பாதுகாப்பான நகரங்கள் ஆணையம் (PSCA) ஆகியவையும் இந்த ஹெக்கர்களின் இலக்குகளாக இருந்துள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் பதிலளிக்கையில், சீனா அனைத்து வகையான சைபர் தாக்குதல்களையும் கடுமையாக எதிர்ப்பதாகவும், தங்களது உட்கட்டமைப்பை இதற்குப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியத் தூதரகம் இது குறித்து தற்சமயம் வரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. இதற்கிடையில், கடந்த ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியபோது சைபர் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்ததாகவும், தங்களது முக்கியத் தரவுகள் எதுவும் திருடப்படவில்லை என்றும் கைபர் பக்துன்க்வா பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan