அரசாங்க வேலைக்காக பரீட்சை எழுதியவர்களுக்கு எச்சரிக்கை : பணம் பறிபோகலாம்
சுங்கத்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுங்கத் திணைக்களம் பொது மக்களை அறிவறுத்தியுள்ளது.
குறித்த மோசடி தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
அரச துறைக்கு போட்டிப் பரீட்சை எழுதுபவர்களை இலக்காகக் கொண்டு இந் மோசடி செயற்படுத்தப்படுத்தப் படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சுங்கத் திணைக்களத்தில் இணைவதற்கு அவ்வாறானதொரு முறைமை இல்லை எனவும் போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களே வேலைவாய்ப்புக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும் சிவலி அருக்கொட மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)