தற்போதைய முடக்கல் பயனளிக்காது! அபாயகரமான கோவிட் மாறுபாடுகளுடன் நிலைமை மோசமாகுமென எச்சரிக்கை
பொது மக்களின் இயக்கம் சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால் தற்போதைய முடக்கல் பயனளிக்காது என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
தற்போது நாட்டில் முடக்கல் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு இல்லாதது போல் மக்கள் நடந்து கொள்வதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை நீடிப்பது உண்மையில் பயனற்றது. ஏனென்றால் நாட்டின் தற்போதைய முடக்கலால் எதிர்பார்க்கப்படும் சிறந்த முடிவுகளை அடைய முடியாது என்பது வெளிப்படையானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நடவடிக்கைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், பொருளாதாரத்தை பராமரிப்பது என்ற போர்வையில் மற்ற எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்பது மிகவும் தந்திரமானதாகவே அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தவில்லையெனில் எதிர்காலத்தில் மேலும் தொற்று மற்றும் அபாயகரமான கோவிட் வைரஸ் மாறுபாடுகளுடன் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.