மின் உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம்! வெளியாகியுள்ள எச்சரிக்கை
அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தால் நாட்டின் மின்சக்தித் துறை மற்றும் பொருளாதாரம் ஆகியன பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் பிரதான காரியாலயத்தில் நேற்று(20.04.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதிகரித்துள்ள பொருட்கள் சேவைகளின் விலை உயர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி மற்றும் தாமதங்கள் காரணமாக, இந்த ஆண்டு மின் உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது.
ஒரு அலகு நீர் மின்சாரத்துக்கு 3 ரூபாவும், நிலக்கரிக்கு 23 ரூபாவும் செலவாகும் நிலையில், தட்டுப்பாட்டை நிவர்த்திக்க 80 ரூபா செலவில் டீசல் மின்சாரத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
390 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையை வழங்காமல், அந்த நிதியை டீசல் கொள்வனவுக்குப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளமையானது அரசாங்கத்தின் திவால் நிலையை உறுதிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் அமைச்சர்களுடைய வங்கிக் கணக்குகள் அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பிதமடைந்துள்ளது என்று சாடிய அவர், வரவு - செலவுத் திட்ட நிதியில் வெறும் 30 சதவீதத்தை மாத்திரமே அரசாங்கம் செலவிட்டுள்ளமை அதன் இயலாமையைக் காட்டுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்தியாவுடன் இரகசியமான முறையில் 7 உடன்படிக்கைகளை மேற்கொண்டு தரவுகளைப் பகிர முற்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளில் இருந்து விடுபட அரசாங்கம் வழிதேட வேண்டும் என்று வலியுறுத்திய சுஜீவ சேனசிங்க, நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய அனுபவம் வாய்ந்த குழு சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே உள்ளது என்றும் தெரிவித்தார்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்கள் நலனுக்காக ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam