ஜனாதிபதி செயலகத்தில் சேதம் விளைவித்தவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் வெளியிட்ட தகவல்
ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பனவற்றிற்குள் அத்து மீறி பிரவேசித்து சேதம் விளைவித்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் 150 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டவர்கள்
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்து மீறி பிரவேசித்து சேதம் விளைவித்த 55 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் அலுவலகம் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை என்பனவற்றின் மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்த 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில் திருடிய பொருட்களை விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது |
