அதிகரிக்கும் காதல் வன்முறை சம்பவங்கள்: இரு சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம் (Video)
இலங்கையில் தற்போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளும் , பாலியல் துஷ்பிரயோகங்களும் பல இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் சிறுவயது காதல் பிரச்சினையினாலும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் பதிவாகிவருகின்றன. இந்நிலையில், கடந்த புதன்கிழமை காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் இரு மாணவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது சிறுவனுக்கு ஆசிரியர் ஒருவர் ஓரின பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களை புரிந்து வந்த நிலையில் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறை சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது.
இவ்வாறு இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வை இதோ,
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு