யாழில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்! பொலிஸார் அசமந்தப்போக்கு; மக்கள் விசனம்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Rakesh Oct 15, 2022 07:22 AM GMT
Report

யாழ். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாட்களாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன என்று விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள், பொலிஸ் இந்த விடயத்தில் அசமந்தமாகச் செயற்படுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பகுதிகளில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சியின் கீழ் அச்சுவேலி, தெல்லிப்பழை, இளவாலை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி, பலாலி போன்ற பகுதிகள் அடங்குகின்றன.

குற்றங்கள் அதிகரிப்பு

யாழில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்! பொலிஸார் அசமந்தப்போக்கு; மக்கள் விசனம் | Crime Jaffna Police Investigation

அண்மை நாட்களாக பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுகளில் வழிப்பறிக் கொள்ளைகளும், வீடு உடைத்து திருடும் சம்பவங்களும், மோட்டார் சைக்கிள் திருட்டுக்களும் அதிகரித்துள்ளன.

வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவில் ஒரே நாளில் 4 களவுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 3 வழிப்பறிச் சம்பவங்களில் 10 பவுண் நகைகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் வீட்டின் கூரை பிரித்து பகல் வேளையில் நான்கரைப் பவுண் நகைகளும், ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளது.

அதேநேரம், பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் பிரிவுகளில் கடந்த சில நாள்களாக மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்துள்ளன. திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுவதும் வடமராட்சிப் பிரதேசத்தில் அதிகரித்துள்ளது.

பொலிஸார் பராமுகம்

யாழில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்! பொலிஸார் அசமந்தப்போக்கு; மக்கள் விசனம் | Crime Jaffna Police Investigation

கடந்த சில நாள்களாகக் குற்றங்கள் அதிகரித்துள்ளபோதும், இதுவரையில் பொலிஸார் சந்தேகநபர்கள் எவரையும் கைது செய்யவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுகின்றனர் என்று கூறும் பொதுமக்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் விசனம் தெரிவிக்கின்றனர். 

யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸார் விரைவாகச் செயற்பட்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது என்று தெரிவிக்கும் மக்கள், காங்கேசன்துறைப் பிராந்தியத்தில் அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை என்று கூறுகின்றனர்.

இதுவா காரணம்

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள் தமக்குக் கீழ் பல்வேறு பொலிஸ் குழுக்களை அமைத்து செயற்படுத்துவது வழமை என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸார், ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்றாலும், இவ்வாறான குழுக்களுக்கு அந்த விடயத்தில் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகின்றது.

அதனால் அந்தக் குழுக்கள் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களைக் கைது செய்யக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணம் பிராந்தியத்திலும் அவ்வாறான பொலிஸ் குழுக்களே குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து நீதிமன்றங்களில் முற்படுத்துகின்றன.

காங்கேசன்துறைப் பிராந்தியத்திலும் அவ்வாறான பொலிஸ் குழுக்கள் முன்னர் செயற்பட்டிருந்தபோதும், இப்போது அந்தப் பொலிஸ் குழுக்களின் நடவடிக்கைகள் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும், அந்தக் குழுக்கள் செயற்றிறன் அற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளமையே குற்றச் செயல்கள் அதிகரிக்கக் காரணம் என்றும் கூறப்படுகின்றது.

பொலிஸாருக்குத் தலையிடி

யாழில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்! பொலிஸார் அசமந்தப்போக்கு; மக்கள் விசனம் | Crime Jaffna Police Investigation

பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுகளில் நடக்கும் குற்றங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று அங்குள்ள பொலிஸார் கூறுகின்றனர்.

ஒரு பொலிஸ் பிரிவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் இன்னொரு பொலிஸ் பிரிவில் தலைமறைவாக இருப்பதால் உடனடி நடவடிக்கைகளைத் தங்களால் மேற்கொள்ள முடியாதுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் தங்களாலான முயற்சிகளை முன்னெடுக்கின்றோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

திருடர்கள் அதிகளவில் நடமாடுவதால் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மக்கள் விசனம்

குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டிய பொலிஸார், குற்றவாளிகளைக் கைது செய்யாது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கின்றனர்.

இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வீதியிலும், வீட்டிலும் அச்சத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது" என்று தெரிவித்துள்ள மக்கள், இந்த விடயத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US