எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து முத்தையா முரளிதரன் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை உலகக்கிண்ணத் தொடரை இந்தியா நடத்தவுள்ளதுடன், போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல்
ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்
இந்த நிலையில், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் வெற்றி குறித்து முத்தையா முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும். ஏனெனில் அவர்கள் சிறந்த அணி. மேலும் சொந்த மைதானங்களில் சாதகமான சூழ்நிலை உள்ளது. அத்துடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் இரசிகர்களின் ஆதரவும் உள்ளதுடன், இவை இந்திய வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்.
இதற்கு அடுத்த படியாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தானும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri