அனைத்து வங்கிகளும் கிரிக்கெட் சபை அதிகாரிகளின் கணக்குகளை முடக்க வேண்டும்.....! எழுந்துள்ள கோரிக்கை
இலங்கை வங்கியின் சுதந்திர சதுக்கக் கிளையிலிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த தகவலை இன்று (09.112023) நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகரிடம் கோரிக்கை
எனவே இந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளின் கடவுச்சீட்டுகளை முடக்குவதற்கும் சபாநாயகர் தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனைத்து வங்கிகளும் இலங்கை கிரிக்கெட்டின் கணக்குகளை முடக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அறிவுறுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
