பௌத்த பிக்குவிடமிருந்து திருடப்பட்ட 4 லட்சம் ரூபா
பௌத்த பிக்கு ஒருவரின் கடன் அட்டையைத் திருடி நான்கு லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தில் உள்ள பிரபலமான விகாரை ஒன்றில் தங்கியுள்ள பௌத்த பிக்கு ஒருவருக்குச் சொந்தமான கடனட்டை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருடப்பட்டு அதன் மூலம் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தொலைப்பேசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதி

சம்பவம் தொடர்பில் குறித்த பிக்கு மேற்கொண்டுள்ள முறைப்பாட்டை அடுத்து மாளிகாவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் விசாரணைகளுக்கான காணொளிக் காட்சிகள் உள்ளிட்ட தடயங்களை பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்ற அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 5 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan