இலங்கையில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
நாட்டில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் 7 கோவிட் -19 மரணங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இலங்கையில் கோவிட் -19 காரணமாக மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 339 ஆக உயர்வடைந்துள்ளது.
1. மக்கான பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சிறுநீரக கோளாறு மற்றும் கோவிட் -19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. வேஉட பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான ஆண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இருதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறு என்பவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இருதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறு என்பவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
5. பியகம பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 2ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா மற்றும் சுவாசப்பை கோளாறு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
6. திக்வெல்ல பொதரகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 1ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் -19 தொற்று, இருதயயக் கோளாறு மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
7. நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam