கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோவிட் எச்சரிக்கை
கொழும்பில் கோவிட் வைரஸின் புதிய மரபணு வேகமாக பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கொழும்பு நகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வைரஸ் மரபணு கொழும்பு நகரில் வேகமாக பரவுவதாக அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தரவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய திருமண நிகழ்வு, பிறந்த நாள் விழா மற்றும் இரவு நேர கேளிக்கை விடுதிகள் நடத்தி செல்வதனை நிறுத்தவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
முடிந்தளவு மக்கள் ஒன்றுகூடுவதனை தவிர்க்க வேண்டும். உரிய சுகாதார முறைகளை பின்பற்றவில்லை என்றால், கொழும்பு நகரில் பாரிய அளவு கொரோனா பரவக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri