கிளிநொச்சி - பூநகரி மத்திய கல்லூரியின் மற்றுமொரு ஆசிரியைக்கும் கோவிட்
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி மத்திய கல்லூரியில் கற்பிக்கும் மற்றுமொரு ஆசிரியைக்கும் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனிடையே பூநகரி மத்திய கல்லூரியில் கற்பிக்கும் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடந்த வாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று அடையாளம் காணப்பட்ட ஆசிரியை அவருடன் நெருங்கிப் பழகியவர் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே இன்று தொற்றுக்குள்ளான ஆசிரியை பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் என்று அறியமுடிந்தது.
ஏற்கனவே வலைப்பாடு கிராமத்தைச் சேர்ந்த பலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri