தீவிரமடையும் கோவிட் - வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு
கோவிட் தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் வவுனியாவில் இராணுவத்தால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியா நகரின் பல்பேவறு பகுதிகளிலும் இராணுவத்தால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா சுகாதாரப் பிரிவினரின் ஆதரவுடன் வவுனியா நகரில் மக்கள் அதிகமாக வந்து செல்கின்ற இடங்களை மையப்படுத்தி இந்த தொற்று நீக்கும் செயற்பாடுகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதில் இராணுவத்தினருடன் இணைந்து வவுனியா நகரசபையினர், சுகாதார பரிசோதர்கள், பொலிஸார் ஆகியோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.