69 பேருக்கு கோவிட் தொற்று - மூடப்பட்ட தனியார் ஆடைத்தொழிற்சாலை
69 ஊழியர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து கொத்மலை பகுதியிலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 799 ஊழியர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட ரெபிட் என்டிஜட்ன் பரிசோதனையில் 69 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமே தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலையில் நுவரெலியா, கொத்மலை, புஸல்லாவை, ராவணாகொட மற்றும்
நாவலப்பிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள் தொழில்புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.