திருமண நிகழ்வுகள் தொடர்பில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய தீர்மானம்
இலங்கையில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் திருமண நிகழ்வுகள் தொடர்பில் சில புதிய தீர்மனங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவல் தடுப்பு செயலணியின் கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இராணுவ தளபதி சவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri