டெல்டா திரிபால் மீண்டுமொரு கோவிட் அலை இலங்கையில் உருவாகும் ஆபத்து
இலங்கையில் 'டெல்டா' திரிபு காரணமாக மேலும் ஒரு கோவிட் அலை உருவாகக்கூடும் என்றும், அது நாட்டில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அவ்வாறில்லை எனின், எதிர்வரும் சில வாரங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் மரண வீதமும் அதிகரிக்ககூடிய சாத்தியங்கள் உள்ளன.
எனவே, டெல்டா வைரஸ் திரிபு குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் சுகாதார வழிகாட்டல்களையும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
