சுரேஷ் சாலேவின் விசாரணையில் வெளிவரும் தகவல்கள் - புலனாய்வுத்துறையினர் வெளிப்படுத்த மறுத்த விடயம்
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களான ராம் மற்றும் நகுலனைப் பயன்படுத்தி புலிகள் எழுச்சி என்ற திட்டத்தை முன்னெடுத்ததாக தற்போது புலனாய்வுத்துறையினருடைய கோப்புக்களில் தகவல்கள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன.
சுரேஷ் சாலே 2009 ஆம் ஆண்டின் பின்னர் ராம் மற்றும் நகுலனைப் பயன்படுத்தி புலிகள் மீழெழுச்சி பெறுகின்றார்கள் என்ற செயற்பாட்டை முன்னெடுத்தது மட்டுமன்றி 2007 ஆம் ஆண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்ந்த திட்டத்தை முன்னெடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது சுரேஷ் சாலே உளவுத்துறையில் தமிழ்மக்களினுடைய அசைவுகள் அல்லது தமிழ் மக்களினுடைய அடுத்த கட்ட எழுச்சிகள் தொடர்பில் நிதானத்துடன் செயற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, குறித்த காலப்பகுதியில் தமிழ்தேசிய அரசியலில் இரண்டு அசரியல் பிரமுகர்களை தமது தேவைக்காக பயன்படுத்தி இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையிலே, குறித்த நபர்கள் யார் என்ற விடயத்தை புலனாய்வுத்துறையினர் வெளிப்படுத்த மறுத்து விட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
ஏப்ரலில் இலங்கை சந்திக்கப் போகும் பொருளாதார சரிவு! முதலீட்டாளர்களை அச்சப்படுத்தும் செய்திக்கு அநுர பதிலடி
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri