மன்னார் மாவட்டத்தில் புதிதாக மேலும் 95 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் புதிதாக 95 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 276 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை விடுத்துள்ள கோவிட் தொற்று நிலவர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் புதிதாக 95 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 84 கோவிட் தொற்றாளர்கள் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 11 நாட்களில் 276 கோவிட் தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ் வருடம் மன்னார் மாவட்டத்தில் 1943 தொற்றாளர்களும், தற்போது வரை மாவட்டத்தில் மொத்தமாக 1960 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 22 கோவிட் தொற்று மரணம் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
