கொழும்பின் சில பகுதிகளில் ஏராளமான கோவிட் நோயாளர்கள் பதிவு
கொழும்பு மாவட்டத்தில் பொரள்ளை மற்றும் மிரிஹான பகுதிகளில் இருந்து ஏராளமான கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் இந்த கண்டறிதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
மிரிஹானவிலிருந்து மொத்தம் 56 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், பொரள்ளையில் இருந்து 36 நோய்த்தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
பிலியந்தலயில் இருந்து 42 பேரும், முல்லேரியாவில் 38 பேரும், மொரட்டுவயில் 37 பேரும், கல்கிச்சையில் 35 பேரும், வெல்லம்பிட்டியவில் 29 பேரும், அவிசாவெல்லயில் 21 பேரும், தெஹிவளையில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலபிட்டிய, வெள்ளவத்தை, நாரஹன்பிட்ட, கறுவாக்காடு, தெமட்டக்கொட, மருதானை, கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளிய உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து 10க்கும் குறைவான பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நேற்று மொத்தம் 438 கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கம்பாஹா மாவட்டத்தில் 410, காலியில் 261, களுத்துறையில் 241, நுவரஎலியவில் 179, கண்டியில் 138, மற்றும் குருநாகலில் 100 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
மீதமுள்ள மாவட்டங்களில் இருந்து 100 க்கும் குறைவான கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.