நுவரெலியாவில் நேற்று 46 கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நோயாளர்கள் அடையாளம்
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 46 கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் கோவிட் தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும், ஹங்குராந்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேருக்கும், நவதிஸ்பன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நால்வருக்கும்,
பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், டிக்கோயா சுகாதார
வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், ஹட்டன் பிரிவில் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.