இலங்கையில் 497 ஆண்களைப் பலியெடுத்த கோவிட்! - 304 பெண்களும் பலி
இலங்கையில் கடந்த 02ஆம் திகதியிலிருந்து இன்று வரை 103 கோவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 801 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 497 பேர் ஆண்கள் எனவும் 304 பேர் பெண்கள் எனவும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை,கோவிட் தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 900,000 பைசர் குப்பிகள் எதிர்வரும் ஜூலையில் இலங்கைக்குக் கிடைக்கும்.
49 லட்சம் குப்பிகள் அக்டோபர் மாதத்தில் கிடைக்கும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவர் வைத்திய கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam