கிழக்கு மாகாண ஆளுநருக்கு கோவிட் தொற்று உறுதி
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இதனை அவர் இன்று ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
திருகோணமலை அரச அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பிறகு, இரண்டு நாட்களுக்கு முன்னர் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்பட்டார் எனவும், இதன் முடிவுகள் நேற்று கிடைக்கப் பெற்றதையடுத்து தொற்று உறுதியானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய தனது இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக அவருடன் நெருக்கமான தொடர்பைப் பேணியவர்கள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் நான் துரதிர்ஷ்டவசமாக, கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளேன்" என்று அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இரு நாட்களுக்கு முன்பு கிழக்கு மாகாணத்தில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தத்
தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், உடனடியாக அமுலாகும் வகையில் கிழக்கு
மாகாணத்தின் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும்
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பாதுகாப்பு படையினருக்கு
அறிவுறுத்தியிருந்தார்.