வவுனியா வளாக மாணவர்கள் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி
வவுனியா வளாக மாணவர்கள் உட்பட மேலும் 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.
அதில், யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா, பம்பைமடுவில் உள்ள வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் உள்ள 2 பேருக்கும், நெடுங்கேணியில் உள்ள ஒருவருக்கும் என 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தவும் சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.