கோவிட் நிலைமையை சமாளிக்க அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை: சஜித் விசனம்
இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது, இதற்கிடையில் கோவிட் புதிய திரிபும் பரவி வருகின்றது, இந்த நிலைமையை சமாளிப்பதற்கு அரசிடம் எந்த முன்னாயத்தத் திட்டங்களும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.
விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு விசனம் தெரிவித்துள்ளார்.
மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு
அதில் அவர் மேலும், தற்போது நாட்டில் பல்வேறு மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவில் 180 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.
வைத்தியசாலை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் உள்ளடங்குகின்றன.
இது தொடர்பில் நாம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதிலும், அரசிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் அரசு முன்வைக்கவில்லை.
கோவிட் மாதிரிகளின் துணை மாறுபாடு
எல்.பி. 8.1 எனப்படும் கோவிட் மாதிரிகளின் துணை மாறுபாடு தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் ஹொங்கொங்கில் பரவி வருகின்றது. இந்தத் துணை வகை மாறுபாடுகள் குறித்து நமது நாட்டில் எந்தவித பரிசோதனைகளும் நடைபெறுவதாகக் காண முடியவில்லை.
இந்தத் துணை மாறுபாடு திரிபுகள் தொடர்பாக எமது நாட்டிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் இதனுடன் தொடர்புடைய அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
இந்நிலைமையில் தற்போது சின்னம்மை நோயும் அதிகரித்துள்ளது. இந்த நோய்க்கு ஆகக் குறைந்தது 6 வாரங்களாவது தொடர்ச்சியாகச் சிகிச்சையளிக்க வேண்டும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கும் முறையான திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri
