கிளிநொச்சியில் அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்கள்! அரச அதிபரின் அறிவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் 42 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 92 பேர் அடையாளம் காணப்பட்டு நேற்றைய தினமும் இன்றைய தினமும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 42 பேர் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளை அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு தொடர்ந்து
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.