மட்டக்களப்பில் ஐந்து கடற்படையினருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு கல்லடி கடற்படை முகாமில் 5 கடற்படை வீரர்களுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் 812 கோவிட் தொற்றாளரகல் உயர்வடைந்துள்ளதுடன் இதுவரை 8 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் தொடர்ந்து பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுத்துவரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (14) கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த 5 பேருக்கு கோவிட் தொற்று பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 812 கோவிட் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 8 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 731பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 73 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்து அவதானமாகச் செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
படப்பிடிப்பை தாண்டி ஜாலி டூர் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர்கள்... வீடியோ பாருங்க Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri