மட்டக்களப்பில் ஐந்து கடற்படையினருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு கல்லடி கடற்படை முகாமில் 5 கடற்படை வீரர்களுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் 812 கோவிட் தொற்றாளரகல் உயர்வடைந்துள்ளதுடன் இதுவரை 8 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் தொடர்ந்து பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுத்துவரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (14) கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த 5 பேருக்கு கோவிட் தொற்று பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 812 கோவிட் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 8 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 731பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 73 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்து அவதானமாகச் செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்... வெளிவந்த ஃபஸ்ட் லுக் Cineulagam