விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் தொற்று உறுதி
விபத்தொன்றில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொறட்டுவை எகொடஉயன பாணந்துறை அளுத் கட்டுகுருந்த பிரதேசத்தில் நேற்றிரவு மஞ்சள் கடவையில் வீதியைக் கடந்து கொண்டிருந்த போது லொறியில் மோதுண்டு தலையில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தாய் இன்று காலை உயிரிழந்துள்ளதாக மொறட்டுவை எகொடஉயன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையே இந்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பதற்கு முன்னர் பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்காக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவர் கோவிட் தொற்று நோயாளி எனத் தெரியவந்துள்ளது.
மொறட்டுவை கட்டு குருந்த ஜோசப் ஒழுங்கையைச் சேர்ந்த 35 வயதான பிரியந்தி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.