வவுனியாவில் 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (17.05) பிற்பகல் வெளியாகின. .
அதில், தாலிக்குளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சகாயாமாதாபுரம் பகுதியைவச் சேர்ந்த ஒருவருக்கும், எல்லப்பர் மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.