சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவு ஏற்றும் நடவடிக்கைகள் ஜூன் 8 முதல் ஆரம்பம்
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவு ஏற்றும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சினோபார்ம் முதல் மருந்தளவு ஏற்றிக் கொண்டவர்கள் நான்கு வாரங்களின் பின்னர் இரண்டாம் மருந்தளவை ஏற்றிக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் மருந்தளவு ஏற்றிக் கொண்ட அந்த பகுதியிலேயே இரண்டாம் மருந்தளவை ஏற்றிக் கொள்ள முடியும்.
இதேவேளை, மே மாதம் 8ஆம் திகதி தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் ஜூன் மாதம் 8ஆம் திகதி இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள முடியும்.
அதேபோல் மே மாதம் 9ஆம் திகதி தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் ஜூன் மாதம் 9ஆம் திகதி தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தடுப்பூசி அட்டைகளை தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் இரண்டாவது மருந்தளவினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
