நாட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை! பொதுமக்களிடம் சுகாதாரத்துறையின் முன்வைக்கும் கோரிக்கை
அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகள் உள்ளவர்களுக்கு மாத்திரம் கோவிட்-19 பரிசோதனையினை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் ்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் விரைவான அன்டிஜென் சோதனை கருவிகளின் பற்றாக்குறையினை சுகாதார அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ளதே இவ்வாறான தீர்மானத்துக்கு காரணம்.
விநியோகஸ்தர்கள் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான சோதனை கருவிகளை மட்டுமே பெறுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் சில நாட்களுக்கு ஒருமுறை மில்லியன் கணக்கான பரிசோதனைக் கருவிகளைப் பெற்றதாகவும் ஆனால் தற்போது அவை பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



